Friday 19 June 2015

 ஒப்பாரி 1


தினையும் சோளமும் போச்சு

 சோறென்னும் அரிசி வந்துச்சு

 அரிசி போய், கோதுமையும் போய்
 
மைதா வந்து அடியில மூலமாச்சு
 
 
நாவல் பழமும், நெல்லியும் போச்சு

 ஆப்பிளும் ஆரஞ்சும் வந்துச்சு
 
மிளகும், இஞ்சியும் மருந்தாகி போச்சு

 மிளகாய் வந்து வயித்த பொத்தலாக்கிச்சு
 
 
வெல்லம் வேண்டாம்

 வெள்ளை சர்க்கரை வேணுமின்னு சொன்னோம்

 சர்க்கரை வியாதியும் வந்துச்சு
 
 
கல் உப்பு போச்சுது  சால்ட் உப்பு வந்துச்சு

 கூடவே இலவசமா  தைராய்டும்,  ரத்தக் கொதிப்பும்....
 
 
சாப்பிடுறப்ப தண்ணி வேண்டா

 கோக் தான் மேன்மக்கள் பழக்கம்..
 
அறுசுவை உணவு வேண்டாம்

 அரை வேக்காட்டுப் பீட்ஸா போதும்
 
 
வேப்பங்குச்சி கசப்பாயிருக்கு

சீமை டூத் பேஸ்ட் சுவையா இருக்கு
 
 
பயறு பொடி எதுக்கு?  சோப் இருக்க

 மஞ்சள் எதுக்கு? Crack இருக்கே
 
முக்கனி என்னாத்துக்கு? புரூட் சாலெட் மேல்
 
 
கொள்ளு கொலஸ்ட்ரால குறைக்குமா?

ஓட்ஸ் கஞ்சி தானெ எங்க மருந்து
 
நீராகாரமும் தேவையில்ல
 
 
 இடியாப்பம் வேண்டான்னு சொன்னோம்

நூடுல்ஸ் பேய்  இப்ப ஆப்படிக்குது
 
 
பனைமரக் கள்ளு  போச்சு

 சீமை சரக்கு  எங்க ஈரல கரைச்சிச்சு
 
 
எங்கள் மொழி பேசுறது வேப்பங்காய்

மத்த மொழி எல்லாம் தேவ மொழிக
 
 
அட சாமியே எங்களுக்கு சீமையிலிருந்து தான!
 
எங்க முப்பாட்டன் தான் சிங்கத்திருளன், சுடலை மாடன்,
எல்லைச் சாமிக  மட்டும் தான்..
 
எங்கள் ஊரு அம்மன்கள் எங்க பாட்டிக தானே?

அதனால அவங்கயெல்லாம் சின்னக் சாமிக.

 எவனோ முப்பாட்டனுக தான் பெரிய சாமி...
 
 
நாகரீகம்  நாதாரித்தனமா  போச்சே!
 
எங்க தனித்துவம்  என்னன்னே தெரியலியே?
 
மக்கா...
உன்னால நான் கெட்டேன்  என்னால நீ கெட்ட
 
நீயும் நானும் அடிச்சுகிட்டு சாகுறோமே?
 
ஆள் வச்சு கூட  ஒப்பாரி வைக்க
முடியாம போச்சே?!

No comments:

Post a Comment