Tuesday 21 March 2017

 மார்க்சியம்

 

                                                           எங்கள் நண்பர்களுக்குள் நடக்கும் கருத்துரையாடல்களில் பொதுவாக அனல் பறக்கும். ஒரு நாள் மார்க்சியம் பற்றியப் பேச்சு வந்த போது அதைப் பற்றியப் போதுமான தெளிவில்லாத காரணத்தால் எங்கள் நண்பன் தேடித் பிடித்து பல பல பதிவுகளை கொண்டு விளக்கினான். வேறு  பதிவுகளை வெறுமனே பதிவிறக்கம் செய்து என் வலைத்தளத்தில் பதிவிடுவதை நான் அறவே வெறுப்பேன்..ஆனால் என்னை மிகவும் கவர்ந்துவிட்ட பதிவுகளை வேறு வழியின்றி நகலெடுத்து பதிவிட முடிவெடுத்து விட்டேன். கீழ்வருவன என் எழுத்துகள் அல்ல. யாரேனும் காப்புரிமை சண்டைக்கு வராமலிருந்தால் சரி. 

 

 

 இயங்கியலின் கோட்பாடுகளை  இயற்கைக்கு பொருத்திப்பார்ப்பது - டார்வினியம் 


 சிந்தனைக்கு பொருத்திப்பார்ப்பது - பிராய்டியம் 


 மனித சமூகத்துக்கு பொருத்திப்பார்ப்பது - மார்க்சியம்


 இங்கு நாம் மார்க்சியம் பற்றி பேசுவதால் அதைப் பற்றி மட்டும் எடுத்துக் கொள்வோம்.
மனித சமூகம் எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
அதன் திசை வழியை நாம் அறிய முடியுமா?
முடியும் என்கிறது மார்க்சியம்.


  மார்க்சியம் என்றால் என்ன?

மார்க்சியம் என்பது மூன்று துறைகளை உள்ளடக்கியது,


1. மார்க்சிய மெய்யியல்
2. மார்க்சிய பொருளியல்
3. மார்க்சிய அரசியல்
ஒவ்வொன்றாக பார்ப்போம். ..


  மார்க்சிய மெய்யியல் :  இதில் வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் குறித்து பேசப்படுகிறது.

பொருள் முதல் வாதம்:


பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது அறிவியல் விதி. அதன் வடிவங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருக்கும். பொருளின் வடிவங்களுக்கு வயது உண்டே தவிர, பொருளுக்கு வயது கிடையாது.  இதற்கு காரணம் உற்பத்தி சக்த்திகளும்(வெறும் கல்லுதாங்க), உற்பத்தி உறவுகளும்தான்


 வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்:


உற்பத்திமுறைதான் சமூகத்தின் வடிவத்தை தீர்மானிக்கிறது...


ஒவ்வொரு சமூகத்தின் உற்பத்தி முறையையும் ஆய்வு செய்தால், அந்த சமூகத்தின் வடிவத்தை புரிந்துகொள்ளலாம்.
இயக்க விதிகளை மனித சமூக வரலாற்றுக்கு பொருத்தி பார்ப்பதுதான், வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் எனப்படும். இதற்கு மார்க்ஸ் எடுத்துக் கொண்ட சமூக வரலாறு, ஐரோப்பிய சமூக வரலாறு.

கருத்து:

ஐம்புலன்களால் அறிய முடியாதவை . நம் சிந்தனையில் உருவாகும் எதுவும் நாமாக வெளிப்படுத்தாத வரையில் மற்றவருக்கு தெரியாது. அவைகள்தான் கருத்து எனப்படும்.


 கருத்தின் வயது என்ன?


கருத்து என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தம். மற்ற உயிரினங்களுக்கு கருத்து இல்லை. கருத்தின் உறுப்பு மனித முளை ஆகும். வெளிப்படுத்தாத வரை ஒருவரின் கருத்தை யாராலும் அறிய முடியாது. அந்த வகையில் கருத்துக்கு மனிதனின் வயது மட்டுமே.  ஆனால்  பொருள்களுக்கோ ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.


எனவே பொருளே முதல் என்பது இதன் மூலம் தெளிவு. 

 


1. ஆதி பொதுவுடைமை சமூகம்
2. அடிமைச் சமூகம்
3. நிலபிரபுத்துவ சமூகம்
4. முதலாளித்துவ சமூகம்

ஆதி பொதுவுடைமை சமூகம்:


ஆதிமனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதல், சிங்கத்தை வேட்டையாட வேண்டும் என்றால் கல்லெரிந்துதான் கொல்ல வேண்டும் (அன்றைய உற்பத்திசக்திகளின் வளர்ச்சி அவ்வளவுதான்) ஒருவர் மட்டும் கல்லெரிந்து சிங்கத்தை கொல்ல முடியாது, சிங்கம் இவரை கொன்று விடும் .  எனவே, இருத்தலின் பொருட்டு (தான் உயிர் வாழ்தல் பொருட்டு), மனிதன் கூட்டமாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. கூட்டமாக வேட்டையாடுவது, அனைவரும் பகிர்ந்து உண்ணுவது. இதுவே ஆதிபொதுவுடைமை சமூகத்தின் நிலையாகும்.

அடிமைச் சமூகம்:



இதன் வளர்ச்சிக்கு காரணம் அதன் முதன்மை முரன்பாடான ஆண்டைகளும் அடிமைகளும் தான்(முதல் விதி)
அடிமைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் (அளவு மாற்றம்), அதன் புரட்சிக்கு (பண்பு மாற்றத்திற்கு) வழிவகுக்கிறது. அடிமை சமூகத்தில் ஒரு பிரிவு மக்கள் உழைப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு கலை, இலக்கியம், தத்துவம், என்ற இன்ன பிற துறைகளை வளர்த்தனர்.(மூன்றாவது விதி: நிலைமறுப்பின் நிலைமறுப்பு)


நிலப்பிரபுத்துவ சமூகம்:

இங்கு பண்ணயடிமைகள் தங்களுக்கான நிலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்.
மீதி மூன்று நாள் நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். (அதாவது விளைவதில் பாதி தனக்கு, மீதி நிலப்பிரவுக்கு)
இங்கு பண்னை அடிமை என்பவன் நிலத்தோடு பினைக்கப்பட்டவன்
நிலம் விற்கப்படும் போது நிலத்தோடு அவனும் விற்கப்படுவான். எனவே பண்ணை அடிமையை கொல்லும் அதிகாரம் நிலப்பிரபுவுக்கு கிடையாது.
(அடிமை சமூகத்தில் அடிமையை ஆண்டை கொல்லலாம்!).
எனவே பண்ணையடிமை அரை அடிமை ஆவான்.


 சரி, இந்த ஆதிபொதுவுடைமை சமூகம் மறைந்து எப்படி அடிமை சமூகம் வந்தது என்பதை பார்க்க வேண்டும் அல்லவா?

இங்குதான் இயங்கியலின் மூன்று விதிகள் நமக்கு பயன்படுகின்றன.
முதல் விதி: முரன்பாடு (எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராடமும்)
ஆதிபொதுவடைமை சமூகத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் தான் முரன்பாடு
மனிதன் இயற்கையோடு இடையறாது போராடினான் (உயிர் வாழ்தல் பொருட்டுதான்)
விளைவு: உற்பத்தி சக்த்திகள் வளர்ச்சி அடைந்தன (கல்லு கோடரி ஆச்சு, கோடரி ஈட்டி ஆச்சு, ஈட்டி வில் அம்பு ஆச்சு).


 இயந்திரங்களை மட்டுமே சொந்தமாகக் கொண்ட ஒரு வர்க்கம் தோன்றியது அப்பொழுதுதான்.
அது முதலாளி வர்க்கம் எனப்பட்டது.

(அடிமை சமூகத்தில் அடிமைகள்தான் செல்வம், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலம்தான் செல்வம்).

நிலத்தில் கலப்பபையை மட்டுமே பயன்படுத்த தெரிந்த பண்ணையடிமைகளுக்கு, கல்வி கற்று கொடுக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கு இருந்தது.

ஏனெனில் அப்பொழுதுதான் அவர் ஸ்பேனர் பிடித்து இயந்திரங்களில் வேலை செய்ய முடியும், பண்ணையடிமகளின் உதவியோடு, நிலப்பிரபுக்களை வீழ்த்தி முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இதுவே பிரெஞ்சு புரட்சியாகும்.


இங்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முழுமையாக விற்கப்படுகிறான்.
அடிமையின் ஆற்றல், உழைப்பு, திறமை அனைத்தும் அவரை வாங்கிய ஆண்டைக்கே சொந்தமாகும்.
அடிமைக்கு என்று எதுவும் சொந்தம் இல்லை
அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு வழிவகுத்தது.


 இந்த விதத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் என்பது, அடிமை சமூகத்தை விட முற்போக்கானது.
18ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ முறையே நிலவியது எனலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்படதுதான் (உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சிதான்), சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. நீராவி இயந்திரங்களை சொந்தமாக கொண்டவர்கள், உற்பத்தியின் துரித வளர்ச்சிக்காக நிலப்பிரபுக்களோடு சண்டையிட்டனர். துனைக்கு பண்ணையடிமகளையும் அழைத்துக்கொண்டனர்.


 இப்படியாக ஒரு பிரிவு மக்கள் தீவிர உழைப்பில் இருந்து விடுபட்டனர்.
இவர்கள் ஆண்டைகள் ஆயினர், உழைக்கும் மக்கள் அடிமைகள் ஆயினர். ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் நடக்கும், சண்டையில் தோற்றவர்களில்
ஆன்கள் கொலைசெய்யப்பட்டனர், பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் (இனப்பெருக்கத்திற்காக).

ஒரு புதிய சமூக வடிவம் தோன்றியது. இதுவே அடிமைச் சமூகம் எனப்படும்

 

இந்த நான்கு சமூகமும் இயக்கவிதிகளுக்கு உட்பட்டு ஒன்றிலிருந்து ஒன்று மாறி வந்துள்ளது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார். ஒவ்வொரு சமூகமும் அதன் உள் முரன்பாடுகளால் (இயக்கவியலின் முதல் விதி) வளர்கின்றன, அதில் ஏற்ப்படும் அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் பண்பு மாற்றங்களை (இயக்கவியலின் இரண்டாவது விதி) ஏற்படுத்துகின்றன, படைக்கப்பட்ட புதிய சமூகம், பழைய சமூகத்தில் இருந்து தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்கி விடுகின்றன. இயக்கவியலின் மூன்றாம் விதி).


 


 மூன்று விதிகள்:
1.எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்: (Opposites interpenetrate)
2. அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல் (Quantity changes to Quality)
3. நிலை மறுப்பின் நிலை மறுப்பு (Negation of Negation)

 

1.எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்:


அண்டத்தில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன, அந்த மாற்றத்திற்கு காரணம் அதன் உள் முரண்பாடுகளே. முரண்பாடுகளின் இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று எதிர்க்கும், ஆனால் ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.
இயற்கையில், பகல் – இரவு, வெப்பம் – குளிர்
மனித சமூகத்தில், உற்பத்தி சாதனங்களும் – உற்பத்தி உறவுகளும்
மனித சிந்தனையில், நனவு மனம் (Concious mind) – நனவிலி மனம் (Un concious mind)

 

 2.அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்:


எல்லாவற்றிலும் ஏற்படும் அளவு மாற்றம் வெளிப்படையாக தெரியாது, அளவு மாற்றத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அது பண்பு மாற்றமாக மாறும். இயற்கையில், நீரை கொதிக்க வைக்கும் போது அதன் வெப்பநிலையில் ஏற்படுவது அளவு மாற்றம், 100 டிகிரியை தொட்டதும் நீர் ஆவியாவது பண்பு மாற்றம்.


மனித சமூகத்தில், அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் முதலாளித்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது. மனித சிந்தனையில், ஒரு செயலை சிந்தித்துக் கொண்டே (அளவு மாற்றம்) ஒரு கட்டத்தில் அதற்கான செயலில் ஈடுபடுவது. (பண்பு மாற்றம்)


 3.நிலை மறுப்பின் நிலை மறுப்பு:


மாற்றத்தின் போது, எல்லாவற்றிலும் பழைய நிலையில் உள்ள தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது. இயற்கையில், விதையில் இருந்து செடி வரும்போது விதையில் இருந்து உயிர்த்தன்மையை எடுத்துக் கொண்டு விதையின் ஓடுகள் விலக்கப்படுகின்றன. மனித சமூகத்தில், ஒரு சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகம் வரும்போது பழைய சமூகத்தின் தொழில் நுட்பங்களை எடுத்துக்கொண்டு அதன் உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன. மனித சிந்தனையில், தேவையானவற்றை மட்டும் கொண்டு மற்றவற்றை புறக்கனிப்பது.


இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்றால் என்ன?
பொருள்களில் ஏன் மாற்றம் வருகிறது?
இதற்கு இயக்கவியலை சற்று புரிந்து கொள்வது அவசியம்.
இந்த மூன்று விதிகளும்,

1. இயற்கை
2. மனித சமுகம்
3. மனித சிந்தனை
மூன்றிற்கும் பொருந்தும்.


 


 பொருள்: பொருள் என்றால் என்ன?


பொருள் என்பது நமக்கு புறத்தே உள்ளது. ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் அனைத்தும் பொருள்கள் தான்.


 

வேட்டையாடுதல் என்ற தொழிலில் இருந்து முதல் உழைப்பு பிரிவினையான கைவினைத்தொழில் தோன்றியது (கோடரி, ஈட்டி செய்தல்). கைவினைத்தொழில் செய்வோருக்கும் சேர்த்து மற்றவர்கள் வேட்டையாடினர் .  காலப்போக்கில் கைவினைப்பிரிவினர் தொழிலில் தேர்ச்சி அடைந்தனர், அவர்களின் சிந்தனை சக்தியும் வளர்ந்தது. உற்பத்தியும் பெருகியது, மிகையான உற்பத்தியை ஒரு குழு இன்னொரு குழுவிடம் பறிமாறிக்கொண்டது.
 உற்பத்தி சக்திகளில் ஏற்படும் இந்த வளர்ச்சிதான்(இரண்டாவது விதி:அளவு மாற்றம்), ஒரு புதிய சமூக அமைப்புக்கு காரணமாக (பண்பு மாற்றமாகிறது) அமைகிறது (வரலாற்றில் இது தவிர்க்க முடியாதது)
நூறு பேர் சேர்ந்து செய்த வேலையை, உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சியால் ஒருவர் மட்டுமே செய்ய முடிந்தது என்பது வர்க்க பிரிவினைக்கு வழிவகுத்தது.



  எனவே பண்ணையடிமை என்பவன் இப்பொழுது ஒரு சுதந்திர தொழிலாளி ஆகிறான்.
ஆனால் இந்த தொழிலாளி இரண்டு வகையிதான் சுதந்திரம் உள்ளவன்.
1. ஒரு தொழிலாளி உழைக்கலாம் அல்லது உழைக்காமல் பட்டினி கிடந்து சாகலாம், இந்த சுதந்திரம் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பன்ணையடிமையோ உழைத்தேயாக வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள்)
2. ஒரு தொழிலாளி எந்த முதலாளியிடம் வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம், இந்த சுதந்திரனும் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பண்ணையடிமையோ முதலாளியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாதவர்கள்.)


இப்பொழுது மூலதனம் (Capital) என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.


உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த பகுதியே மூலதனம் எனப்படும். மூலதனம் உபரிமதிப்பை தோற்றுவிக்கும், உபரி மதிப்பு மூலதனத்தை பெருக்கமடைய செய்யும்.

மூலதனமும், உபரிமதிப்பும், இரண்டு எதிர் எதிர் கூறுகள் (இயங்கியலின் முதல் விதியான ‘எதிர்கூறுகளின் ஒற்றுமையும், போராட்டமும்’ என்ற விதியை இங்கு நினைகூர்க)

 முலதனத்துக்கும், உபரி மதிப்புக்கும் உள்ள இந்த முரண்பாட்டால், முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் அளவு மாற்றம் எப்படி இருக்கும் என்பதை இனி பார்க்கலாம்.


முதலாளி உபரி மதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்றுதான் அனுதினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.


1. கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
2. அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது,  கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.


முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளின் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது. தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.
உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு, அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.


 முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பண்டமானது சந்தையில் விற்பனைக்கு வருவது போலவே, தொழிலாளியின் உழைப்பு சக்த்தியும் ஒரு பண்டமாக விற்பனைக்கு வருகிறது. அதை முதலாளிகள் வாங்க முற்படுகிறார்கள். 8 மணிநேர உழைப்புக்கு 100 ரூபாய் கூலி என்று ஒப்பந்தம் போட்டு வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், முடிவில், முதலாளிக்கு ஒரு பைசாவும் லாபமாக கிடைக்காது. எனவே, இதைக் கருத்தில் கொண்டே முதலாளிகள் தொழிலாளர்களிடம் முதலிலேயே 12 மணிநேரத்தை வேலைநேரமாக சொல்லி விடுகிறார்கள். எனவே, 8 மணிநேரத்திற்கான கூலியாக தொழிலாளி 100 ரூபாயைப் பெற்று கொள்கிறான், ஆனால், முதலாளிக்காக மேலும் 4 மணி நேரம் கூடுதலக வேலை செய்கிறான். அந்த நேரத்தில் உற்பத்தியாகும் மதிப்புதான் உபரி மதிப்பு ஆகும். நிலம், கட்டிடம், இயந்திரம், மூலப்பொருள் இவையெல்லாம் உபரியை தோற்றுவிக்காது என்பதால், அவர் ஒரு தொழிலாளியிடம் இருந்துதான் இதை அபகரிக்க முடியும்.
நரம்பும், சதையையும் கொண்ட ஒரு தொழிலாளியால்தான், உபரிமதிப்பைத் தோற்றுவிக்க முடியும்.


 எனவே உற்பத்தி சாதனங்களை (இயந்திரங்களை) சொந்தமாக கொண்ட ஒரு (முதலாளி) வர்க்கம், உற்பத்தி சாதனங்கள் சொந்தமாக இல்லாத ஒரு (தொழிலாளி) வர்க்கத்தை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒரு சமூக அமைப்புதான் முதலாளித்துவ சமூக அமைப்பு எனப்படும்.
சமுதாயத்தின் பொருளுற்பத்திமுறைதான் அதன் அடிக்கட்டுமானம், கடவுள், மதம், நம்பிக்கை, அரசு, ராணுவம், தத்துவங்கள், இதெல்லாம் அதன் மேல் கட்டுமானங்கள்,

 


எனவே ஒரு தொழிலாளியின் உழைப்பு நேரத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. அவசியமான உழைப்பு நேரம் (இதன் மதிப்பை தொழிலாளி கூலியாக பெற்று விடுகிறார்)
2. உபரி உழைப்பு நேரம் (இதன் மதிப்பை முதலாளி அபகரித்துக் கொள்கிறார்)
இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது
இதில் இரண்டு வழி முறைகள் உள்ளன,


1.முதலாளித்துவ வழிமுறை,
2.மார்க்சிய வழிமுறை
முதலில் முதலாளித்துவ வழிமுறையைப் பார்ப்போம்
நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
கூலி (12 மணிநேர உழைப்புக்கு) = 100 ரூபாய்

இவற்றில் நிலம், கட்டிடம், இயந்திரம் ஆகியவை நிலைத்த மூலதனம் என்றும், மின்சார செலவு, மூலப் பொருள், கூலி ஆகியவை சுற்றோட்ட மூலதனம் என்றும் பிரிக்கப்படுகிறது.

மார்க்சிய வழிமுறை:


உபரி மதிப்பை கணக்கிடும் போது எந்த மூலதனம் உபரியை தருகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மொத்த மூலதனத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதாவது மார்க்ஸ் மூலதனத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்

நிலம், கட்டிடம், இயந்திரம், மின்சார செலவு, மூலப்பொருள் இவை எல்லாம் உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை என்பதால் இவை மாறா மூலதனம் எனப்படுகிறது.

கூலி மட்டுமே உபரி மதிப்பைத் தோற்றுவிப்பதால், அது மட்டுமே மாறும் மூலதனம் ஆகும். இதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


8 மணிநேர உழைப்புக்கான கூலியை பெற்றுக் கொண்டு ஒரு தொழிலாளி 12 மணிநேரம் உழைக்கிறார். கூடுதலான அந்த 4 மணிநேர உழைப்பின் மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்கிறார். ஏன்,
உற்பத்திசாதனங்கள் (நிலம், கட்டிடம், இயந்திரம்) எல்லாம் முதலாளிக்கு சொந்தமாக இருக்கிறது.
தொழிலாளிக்கு தன்னுடைய உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவுமே சொந்தமாக இல்லை.
இதனாலேயே, உபரி மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்வது என்பது நியாயப்படுத்தப்படுகிறது. இயந்திரம், கட்டிடம் எல்லாம் வானத்தில் இருந்து வந்தவை அல்ல, அதுவும் தொழிலாளர்களின் உழைப்புதான். இதைதான் மார்க்ஸ் இறந்த கால உழைப்பின் மீது நிகழ்கால உழைப்பு வினை புரிகிறது என்றார்.


 எனவே முதலாளிகள் இரண்டாவது வழியை பின்பற்ற ஆரம்பித்தார்கள் .

அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.


8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும். எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள். தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள். எனவே முதலாளித்துவம், சுய லாபத்திற்காக தொழில் நுட்ப வளர்சியை துரிதப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது,
எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலேயும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறுவதற்கு காரணம் இதுதான்.  கூலியையும், உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளியும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டார்கள்.



பிரச்சனையின் தீர்வாக, இருவரும் அதை (கூலியயும், உபரி மதிப்பையும்) நியாயமான முறையில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் கூறினார்கள்.
முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில் கண்டார்களோ, அதே இடத்தில்தான் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிரூபித்தார்.

 

 


 மூதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது. எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒருசில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெரு முதலாளிகள் ஆகின்றனர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து விடுகிறார்.

பாட்டாளிகள் பெருக பெருக அவர்கள் அமைப்பு ரீதியில் அணிதிரண்டு புரட்சி செய்யும் போது, சமூக மாற்றம் ஏற்படும், அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.
எனவே இன்றைய கட்டதில், அமைந்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் உற்uபத்தி முறைகளை ஆய்வு செய்து, இயக்க விதிகளை பொருத்திப் பார்ப்பதன் மூலம் அடுத்து அமையப்போகும் சமூகத்தை நாம் முன்னறிவிக்க முடியும். அதற்கு நாம் பயில வேண்fடியது மார்க்சிய பொருளியல்.




மார்க்சியம் என்றால் என்ன?
மார்க்சியம் என்பது மூன்று துறைகளை உள்ளடக்கியது,:
1. மார்க்சிய மெய்யியல்
2. மார்க்சிய பொருளியல்
3. மார்க்சிய அரசியல்
ஒவ்வொன்றாக பார்ப்போம். ..
1. மார்க்சிய மெய்யியல்
இதில் வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் குறித்து பேசப்படுகிறது.
பொருள்:

பொருள் என்றால் என்ன?
பொருள் என்பது நமக்கு புறத்தே உள்ளது.
ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் அனைத்தும் பொருள்கள்தான்.
கருத்து:
ஐம்புலன்களால் அறிய முடியாதவை .
நம் சிந்தனையில் உருவாகும் எதுவும் நாமாக வெளிப்படுத்தாத வரையில் மற்றவருக்கு தெரியாது. அவைகள்தான் கருத்து எனப்படும்.
பொருள் முதல் வாதம்:
பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது அறிவியல் விதி. அதன் வடிவங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருக்கும்.
பொருளின் வடிவங்களுக்கு வயது உண்டே தவிர,
பொருளுக்கு வயது கிடையாது.
கருத்தின் வயது என்ன?
கருத்து என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தம். மற்ற உயிரினங்களுக்கு கருத்து இல்லை. கருத்தின் உறுப்பு மனித முளை ஆகும்.
வெளிப்படுத்தாத வரை ஒருவரின் கருத்தை யாராலும் அறிய முடியாது.
அந்த வகையில் கருத்துக்கு மனிதனின் வயது மட்டுமே
ஆனால்
பொருள்களுக்கோ ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.
எனவே பொருளே முதல் என்பது இதன் மூலம் தெளிவு.
இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்றால் என்ன?
பொருள்களில் ஏன் மாற்றம் வருகிறது?
இதற்கு இயக்கவியலை சற்று புரிந்து கொள்வது அவசியம்.
இந்த மூன்று விதிகளும்,

1. இயற்கை
2. மனித சமுகம்
3. மனித சிந்தனை
மூன்றிற்கும் பொருந்தும்.
மூன்று விதிகள்:
1.எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்: (Opposites interpenetrate)
2. அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல் (Quantity changes to Quality)
3. நிலை மறுப்பின் நிலை மறுப்பு (Negation of Negation)
1.எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்:
அண்டத்தில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன, அந்த மாற்றத்திற்கு காரணம் அதன் உள் முரண்பாடுகளே. முரண்பாடுகளின் இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று எதிர்க்கும், ஆனால் ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.
இயற்கையில், பகல் – இரவு, வெப்பம் – குளிர்
மனித சமூகத்தில், உற்பத்தி சாதனங்களும் – உற்பத்தி உறவுகளும்
மனித சிந்தனையில், நனவு மனம் (Concious mind) – நனவிலி மனம் (Un concious mind)
அளவு மாற்றம் பண்பு மாற்றமாக மாறுதல்:
எல்லாவற்றிலும் ஏற்படும் அளவு மாற்றம் வெளிப்படையாக தெரியாது, அளவு மாற்றத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அது பண்பு மாற்றமாக மாறும்.
இயற்கையில், நீரை கொதிக்க வைக்கும் போது அதன் வெப்பநிலையில் ஏற்படுவது அளவு மாற்றம், 100 டிகிரியை தொட்டதும் நீர் ஆவியாவது பண்பு மாற்றம்.
மனித சமூகத்தில், அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் முதலாளித்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மனித சிந்தனையில், ஒரு செயலை சிந்தித்துக் கொண்டே (அளவு மாற்றம்) ஒரு கட்டத்தில் அதற்கான செயலில் ஈடுபடுவது. (பண்பு மாற்றம்)
நிலை மறுப்பின் நிலை மறுப்பு.:
மாற்றத்தின் போது, எல்லாவற்றிலும் பழைய நிலையில் உள்ள தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது.
இயற்கையில், விதையில் இருந்து செடி வரும்போது விதையில் இருந்து உயிர்த்தன்மையை எடுத்துக் கொண்டு விதையின் ஓடுகள் விலக்கப்படுகின்றன.
மனித சமூகத்தில், ஒரு சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகம் வரும்போது பழைய சமூகத்தின் தொழில் நுட்பங்களை எடுத்துக்கொண்டு அதன் உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
மனித சிந்தனையில், தேவையானவற்றை மட்டும் கொண்டு மற்றவற்றை புறக்கனிப்பது.
இயங்கியலின் கோட்பாடுகளை
இயற்கைக்கு பொருத்திப்பார்ப்பது - டார்வினியம்
சிந்தனைக்கு பொருத்திப்பார்ப்பது - பிராய்டியம்
மனித சமூகத்துக்கு பொருத்திப்பார்ப்பது - மார்க்சியம்
இங்கு நாம் மார்க்சியம் பற்றி பேசுவதால் அதைப் பற்றி மட்டும் எடுத்துக் கொள்வோம்.
மனித சமூகம் எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
அதன் திசை வழியை நாம் அறிய முடியுமா?
முடியும் என்கிறது மார்க்சியம்.
வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்:
உற்பத்திமுறைதான் சமூகத்தின் வடிவத்தை தீர்மானிக்கிறது...
ஒவ்வொரு சமூகத்தின் உற்பத்தி முறையையும் ஆய்வு செய்தால், அந்த சமூகத்தின் வடிவத்தை புரிந்துகொள்ளலாம்.
இயக்க விதிகளை மனித சமூக வரலாற்றுக்கு பொருத்தி பார்ப்பதுதான், வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் எனப்படும்.
இதற்கு மார்க்ஸ் எடுத்துக் கொண்ட சமூக வரலாறு,
ஐரோப்பிய சமூக வரலாறு
1. ஆதி பொதுவுடைமை சமூகம்
2. அடிமைச் சமூகம்
3. நிலபிரபுத்துவ சமூகம்
4. முதலாளித்துவ சமூகம்
இந்த நான்கு சமூகமும் இயக்கவிதிகளுக்கு உட்பட்டு ஒன்றிலிருந்து ஒன்று மாறி வந்துள்ளது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்.
ஒவ்வொரு சமூகமும் அதன் உள் முரன்பாடுகளால் (இயக்கவியலின் முதல் விதி) வளர்கின்றன, அதில் ஏற்ப்படும் அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் பண்பு மாற்றங்களை (இயக்கவியலின் இரண்டாவது விதி) ஏற்படுத்துகின்றன, படைக்கப்பட்ட புதிய சமூகம், பழைய சமூகத்தில் இருந்து தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்கி விடுகின்றன. இயக்கவியலின் மூன்றாம் விதி).
ஆதி பொதுவுடைமை சமூகம்:
ஆதிமனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதல், சிங்கத்தை வேட்டையாட வேண்டும் என்றால் கல்லெரிந்துதான் கொல்ல வேண்டும்
(அன்றைய உற்பத்திசக்திகளின் வளர்ச்சி அவ்வளவுதான்) ஒருவர் மட்டும் கல்லெரிந்து சிங்கத்தை கொல்ல முடியாது, சிங்கம் இவரை கொன்று விடும்

எனவே, இருத்தலின் பொருட்டு (தான் உயிர் வாழ்தல் பொருட்டு), மனிதன் கூட்டமாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.
கூட்டமாக வேட்டையாடுவது, அனைவரும் பகிர்ந்து உண்ணுவது. இதுவே ஆதிபொதுவுடைமை சமூகத்தின் நிலையாகும்.
இதற்கு காரணம் உற்பத்தி சக்த்திகளும்(வெறும் கல்லுதாங்க), உற்பத்தி உறவுகளும்தான்
சரி, இந்த ஆதிபொதுவுடைமை சமூகம் மறைந்து எப்படி அடிமை சமூகம் வந்தது என்பதை பார்க்க வேண்டும் அல்லவா?

இங்குதான் இயங்கியலின் மூன்று விதிகள் நமக்கு பயன்படுகின்றன.
முதல் விதி: முரன்பாடு (எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராடமும்)
ஆதிபொதுவடைமை சமூகத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் தான் முரன்பாடு
மனிதன் இயற்கையோடு இடையறாது போராடினான் (உயிர் வாழ்தல் பொருட்டுதான்)
விளைவு: உற்பத்தி சக்த்திகள் வளர்ச்சி அடைந்தன (கல்லு கோடரி ஆச்சு, கோடரி ஈட்டி ஆச்சு, ஈட்டி வில் அம்பு ஆச்சு).
உற்பத்தி சக்திகளில் ஏற்படும் இந்த வளர்ச்சிதான்(இரண்டாவது விதி:அளவு மாற்றம்), ஒரு புதிய சமூக அமைப்புக்கு காரணமாக (பண்பு மாற்றமாகிறது) அமைகிறது (வரலாற்றில் இது தவிர்க்க முடியாதது)
நூறு பேர் சேர்ந்து செய்த வேலையை, உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சியால் ஒருவர் மட்டுமே செய்ய முடிந்தது என்பது வர்க்க பிரிவினைக்கு வழிவகுத்தது.
வேட்டையாடுதல் என்ற தொழிலில் இருந்து முதல் உழைப்பு பிரிவினையான கைவினைத்தொழில் தோன்றியது (கோடரி, ஈட்டி செய்தல்).
கைவினைத்தொழில் செய்வோருக்கும் சேர்த்து மற்றவர்கள் வேட்டையாடினர்
காலப்போக்கில் கைவினைப்பிரிவினர் தொழிலில் தேர்ச்சி அடைந்தனர், அவர்களின் சிந்தனை சக்தியும் வளர்ந்தது.
உற்பத்தியும் பெருகியது, மிகையான உற்பத்தியை ஒரு குழு இன்னொரு குழுவிடம் பறிமாறிக்கொண்டது,
இப்படியாக ஒரு பிரிவு மக்கள் தீவிர உழைப்பில் இருந்து விடுபட்டனர்.
இவர்கள் ஆண்டைகள் ஆயினர், உழைக்கும் மக்கள் அடிமைகள் ஆயினர். ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் நடக்கும், சண்டையில் தோற்றவர்களில்
ஆன்கள் கொலைசெய்யப்பட்டனர், பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் (இனப்பெருக்கத்திற்காக).

ஒரு புதிய சமூக வடிவம் தோன்றியது. இதுவே அடிமைச் சமூகம் எனப்படும்.
அடிமைச் சமூகம்:

இதன் வளர்ச்சிக்கு காரணம் அதன் முதன்மை முரன்பாடான ஆண்டைகளும் அடிமைகளும் தான்(முதல் விதி)
அடிமைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் (அளவு மாற்றம்), அதன் புரட்சிக்கு (பண்பு மாற்றத்திற்கு) வழிவகுக்கிறது.
அடிமை சமூகத்தில் ஒரு பிரிவு மக்கள் உழைப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு கலை, இலக்கியம், தத்துவம், என்ற இன்ன பிற துறைகளை வளர்த்தனர்.(மூன்றாவது விதி: நிலைமறுப்பின் நிலைமறுப்பு)
இங்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முழுமையாக விற்கப்படுகிறான்.
அடிமையின் ஆற்றல், உழைப்பு, திறமை அனைத்தும் அவரை வாங்கிய ஆண்டைக்கே சொந்தமாகும்.
அடிமைக்கு என்று எதுவும் சொந்தம் இல்லை
அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு வழிவகுத்தது.
நிலப்பிரபுத்துவ சமூகம்:
இங்கு பண்ணயடிமைகள் தங்களுக்கான நிலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்.
மீதி மூன்று நாள் நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். (அதாவது விளைவதில் பாதி தனக்கு, மீதி நிலப்பிரவுக்கு)
இங்கு பண்னை அடிமை என்பவன் நிலத்தோடு பினைக்கப்பட்டவன்
நிலம் விற்கப்படும் போது நிலத்தோடு அவனும் விற்கப்படுவான். எனவே பண்ணை அடிமையை கொல்லும் அதிகாரம் நிலப்பிரபுவுக்கு கிடையாது.
(அடிமை சமூகத்தில் அடிமையை ஆண்டை கொல்லலாம்!).
எனவே பண்ணையடிமை அரை அடிமை ஆவான்.
இந்த விதத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் என்பது, அடிமை சமூகத்தை விட முற்போக்கானது.
18ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ முறையே நிலவியது எனலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்படதுதான் (உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சிதான்), சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. நீராவி இயந்திரங்களை சொந்தமாக கொண்டவர்கள், உற்பத்தியின் துரித வளர்ச்சிக்காக நிலப்பிரபுக்களோடு சண்டையிட்டனர். துனைக்கு பண்ணையடிமகளையும் அழைத்துக்கொண்டனர்.
இயந்திரங்களை மட்டுமே சொந்தமாகக் கொண்ட ஒரு வர்க்கம் தோன்றியது அப்பொழுதுதான்.
அது முதலாளி வர்க்கம் எனப்பட்டது.

(அடிமை சமூகத்தில் அடிமைகள்தான் செல்வம், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலம்தான் செல்வம்).

நிலத்தில் கலப்பபையை மட்டுமே பயன்படுத்த தெரிந்த பண்ணையடிமைகளுக்கு, கல்வி கற்று கொடுக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கு இருந்தது.

ஏனெனில் அப்பொழுதுதான் அவர் ஸ்பேனர் பிடித்து இயந்திரங்களில் வேலை செய்ய முடியும், பண்ணையடிமகளின் உதவியோடு, நிலப்பிரபுக்களை வீழ்த்தி முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இதுவே பிரெஞ்சு புரட்சியாகும்.
எனவே பண்ணையடிமை என்பவன் இப்பொழுது ஒரு சுதந்திர தொழிலாளி ஆகிறான்.
ஆனால் இந்த தொழிலாளி இரண்டு வகையிதான் சுதந்திரம் உள்ளவன்.
1. ஒரு தொழிலாளி உழைக்கலாம் அல்லது உழைக்காமல் பட்டினி கிடந்து சாகலாம், இந்த சுதந்திரம் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பன்ணையடிமையோ உழைத்தேயாக வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள்)
2. ஒரு தொழிலாளி எந்த முதலாளியிடம் வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம், இந்த சுதந்திரனும் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பண்ணையடிமையோ முதலாளியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாதவர்கள்.)
எனவே உற்பத்தி சாதனங்களை (இயந்திரங்களை) சொந்தமாக கொண்ட ஒரு (முதலாளி) வர்க்கம், உற்பத்தி சாதனங்கள் சொந்தமாக இல்லாத ஒரு (தொழிலாளி) வர்க்கத்தை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒரு சமூக அமைப்புதான் முதலாளித்துவ சமூக அமைப்பு எனப்படும்.
சமுதாயத்தின் பொருளுற்பத்திமுறைதான் அதன் அடிக்கட்டுமானம், கடவுள், மதம், நம்பிக்கை, அரசு, ராணுவம், தத்துவங்கள், இதெல்லாம் அதன் மேல் கட்டுமானங்கள்,
எனவே இன்றைய கட்டதில், அமைந்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்து, இயக்க விதிகளை பொருத்திப் பார்ப்பதன் மூலம் அடுத்து அமையப்போகும் சமூகத்தை நாம் முன்னறிவிக்க முடியும்.
அதற்கு நாம் பயில வேண்fடியது மார்க்சிய பொருளியல்.
முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பண்டமானது சந்தையில் விற்பனைக்கு வருவது போலவே, தொழிலாளியின் உழைப்பு சக்த்தியும் ஒரு பண்டமாக விற்பனைக்கு வருகிறது. அதை முதலாளிகள் வாங்க முற்படுகிறார்கள். 8 மணிநேர உழைப்புக்கு 100 ரூபாய் கூலி என்று ஒப்பந்தம் போட்டு வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், முடிவில், முதலாளிக்கு ஒரு பைசாவும் லாபமாக கிடைக்காது. எனவே, இதைக் கருத்தில் கொண்டே முதலாளிகள் தொழிலாளர்களிடம் முதலிலேயே 12 மணிநேரத்தை வேலைநேரமாக சொல்லி விடுகிறார்கள். எனவே, 8 மணிநேரத்திற்கான கூலியாக தொழிலாளி 100 ரூபாயைப் பெற்று கொள்கிறான், ஆனால், முதலாளிக்காக மேலும் 4 மணி நேரம் கூடுதலக வேலை செய்கிறான். அந்த நேரத்தில் உற்பத்தியாகும் மதிப்புதான் உபரி மதிப்பு ஆகும். நிலம், கட்டிடம், இயந்திரம், மூலப்பொருள் இவையெல்லாம் உபரியை தோற்றுவிக்காது என்பதால், அவர் ஒரு தொழிலாளியிடம் இருந்துதான் இதை அபகரிக்க முடியும்.
நரம்பும், சதையையும் கொண்ட ஒரு தொழிலாளியால்தான், உபரிமதிப்பைத் தோற்றுவிக்க முடியும்.
எனவே ஒரு தொழிலாளியின் உழைப்பு நேரத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. அவசியமான உழைப்பு நேரம் (இதன் மதிப்பை தொழிலாளி கூலியாக பெற்று விடுகிறார்)
2. உபரி உழைப்பு நேரம் (இதன் மதிப்பை முதலாளி அபகரித்துக் கொள்கிறார்)
இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது
இதில் இரண்டு வழி முறைகள் உள்ளன,
1.முதலாளித்துவ வழிமுறை,
2.மார்க்சிய வழிமுறை
முதலில் முதலாளித்துவ வழிமுறையைப் பார்ப்போம்
நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
கூலி (12 மணிநேர உழைப்புக்கு) = 100 ரூபாய்

இவற்றில் நிலம், கட்டிடம், இயந்திரம் ஆகியவை நிலைத்த மூலதனம் என்றும், மின்சார செலவு, மூலப் பொருள், கூலி ஆகியவை சுற்றோட்ட மூலதனம் என்றும் பிரிக்கப்படுகிறது.
மார்க்சிய வழிமுறை:
உபரி மதிப்பை கணக்கிடும் போது எந்த மூலதனம் உபரியை தருகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மொத்த மூலதனத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதாவது மார்க்ஸ் மூலதனத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்

நிலம், கட்டிடம், இயந்திரம், மின்சார செலவு, மூலப்பொருள் இவை எல்லாம் உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை என்பதால் இவை மாறா மூலதனம் எனப்படுகிறது.

கூலி மட்டுமே உபரி மதிப்பைத் தோற்றுவிப்பதால், அது மட்டுமே மாறும் மூலதனம் ஆகும். இதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
8 மணிநேர உழைப்புக்கான கூலியை பெற்றுக் கொண்டு ஒரு தொழிலாளி 12 மணிநேரம் உழைக்கிறார். கூடுதலான அந்த 4 மணிநேர உழைப்பின் மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்கிறார். ஏன்,
உற்பத்திசாதனங்கள் (நிலம், கட்டிடம், இயந்திரம்) எல்லாம் முதலாளிக்கு சொந்தமாக இருக்கிறது.
தொழிலாளிக்கு தன்னுடைய உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவுமே சொந்தமாக இல்லை.
இதனாலேயே, உபரி மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்வது என்பது நியாயப்படுத்தப்படுகிறது. இயந்திரம், கட்டிடம் எல்லாம் வானத்தில் இருந்து வந்தவை அல்ல, அதுவும் தொழிலாளர்களின் உழைப்புதான். இதைதான் மார்க்ஸ் இறந்த கால உழைப்பின் மீது நிகழ்கால உழைப்பு வினை புரிகிறது என்றார்.
இப்பொழுது மூலதனம் (Capital) என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த பகுதியே மூலதனம் எனப்படும்.

மூலதனம் உபரிமதிப்பை தோற்றுவிக்கும்,
உபரி மதிப்பு மூலதனத்தை பெருக்கமடைய செய்யும்.

மூலதனமும், உபரிமதிப்பும், இரண்டு எதிர் எதிர் கூறுகள் (இயங்கியலின் முதல் விதியான ‘எதிர்கூறுகளின் ஒற்றுமையும், போராட்டமும்’ என்ற விதியை இங்கு நினைகூர்க)
கூலியையும், உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளியும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டார்கள்.

பிரச்சனையின் தீர்வாக, இருவரும் அதை (கூலியயும், உபரி மதிப்பையும்) நியாயமான முறையில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் கூறினார்கள்.
முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில் கண்டார்களோ, அதே இடத்தில்தான் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிரூபித்தார்.
முலதனத்துக்கும், உபரி மதிப்புக்கும் உள்ள இந்த முரண்பாட்டால், முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் அளவு மாற்றம் எப்படி இருக்கும் என்பதை இனி பார்க்கலாம்.
முதலாளி உபரி மதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்றுதான் அனுதினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1. கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
2. அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது
கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளின் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது. தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.
உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு, அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.
எனவே முதலாளிகள் இரண்டாவது வழியை பின்பற்ற ஆரம்பித்தார்கள்

அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.
8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும். எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள். தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள்.
எனவே முதலாளித்துவம், சுய லாபத்திற்காக தொழில் நுட்ப வளர்சியை துரிதப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது,
எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலேயும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறுவதற்கு காரணம் இதுதான்.
மூதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது. எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒருசில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெரு முதலாளிகள் ஆகின்றனர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து விடுகிறார்.

பாட்டாளிகள் பெருக பெருக அவர்கள் அமைப்பு ரீதியில் அணிதிரண்டு புரட்சி செய்யும் போது, சமூக மாற்றம் ஏற்படும், அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.

 

 

                                                                         மேலே கண்ட தொகுப்பு சிறிதாகவே தோன்றினாலும் ஒன்றிரண்டு  முறைப் படித்தால் ஒன்றுமே புரியாது.  சமுக மாறுபாடுகள் குறித்த சற்றேனும் ஆழ்ந்த கண்ணோட்டம் நமக்கு இருந்தால் நல்லது. பாய்ந்து பாய்ந்து விளக்கிய என் நண்பன் சுகுமாரனுக்கு நன்றிகள் பல.



Friday 10 March 2017

N=36 எனும் தப்புக் கணக்கு

 (சுகுமாறனின் முதல் காதல்)





SugumaranPACM: ஜீவா... என் கதைய நானே எழுதிடவா?



 என் கதை:
                            

                          எட்டாம் வகுப்பு வரை எனக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த நண்பன் LHS=RHS என்று பிஸியாகிவிட்டதால்..... நான் கணித டியூசன் செல்வதாய் முடிவானது. 


                           அங்கே இருந்த முருகன் மற்றும் ஜெய்சேம் என்ற இரண்டு ஆசிரியர்கள் (அப்பொழுது தான் பி எஸ் ஸி முடித்திருந்தனர்) எனக்கு குருவாக மட்டுமில்லாது நண்பர்கள் ஆகவும் ஆகினர்.  கணித ஆசிரியர்கள் மட்டுமே நட்பாகினர்.. கணிதம் இல்லை. என் கணிதத் தேர்வின் போது என்னை வில் அவர்களே மிகவு டென்சன் ஆவார்கள்.

                              ஒண்பதாங்கிளாஸ் வகுப்பில் நான் மட்டுமே மாணவன்.. மற்ற மூவர் மாணவிகள். அதனால தேரிவின் போது வகுப்பில் தடுப்பிற்கு இந்தப் பக்கம் எனக்கு தேர்வு நடக்கும் அந்தப் பக்கம் மாணவிகளுக்கு. அப்படி நடந்த முதல் தேர்வில் நான் வழக்கம் போல பெயில். மார்க் சீட் கொடுக்கும்போது ஒரு பெண் என் மார்க்கை பார்த்து சிரிக்க மற்றொரு பெண் இதில் சிரிக்க என்ன இருக்கு... அவன் நல்லா கவிதை எழுதுவானாம். உன்னால முடியுமா என்றால்... எனக்கும் என் கவிதைக்கும் ஒரே வரியில் கிடைத்த முதல் அங்கிகாரம் அது. கரிசனப்பட்டு வந்த குரலை தரிசினப்படக் காத்திருந்தேன்.

                               அதன் பின்னர் நடந்த தேர்வில், தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு கேள்விக்கு(ம்) பதில் தெரியவில்லை. முயற்சித்து பார்க்கலாம் என்று ஒரு துண்டு பேப்பரில் 3. கேள்விக்கான பதில்? என்று எழுதி மறைவு சுவற்றின் கீழ் இருந்த இடுக்கின் வழியாக அனுப்பினேன். 

தப்பு பண்ணிட்டமோனு பதைபதைத்து காத்திருந்தேன். 
தேர்வை தொடர்ந்து எழுத முடியல. யாரும் அசிங்கப்படுத்தும் முன் பேப்பரை கொடுத்துட்டு கிளம்பிடலாம்னு எத்தனித்தேன். 
பேப்பர் மீண்டும் வந்தது.

 பிரித்தேன். 

      n=36


என் வாழ்வில் என்னிடம் நேரடியாக ஒரு  இளம் பெண் பேசிய வார்த்தை...n=36.


பல நாட்கள்... என் நினைவில் நின்ற கவிதையும் n=36.

 இப்படி சில நேரம் என் இதயம் பறக்கும் எண் பதில் கிடைக்கும். ஒரு நாள் தைரியமாக நீண்ட நாள் வினாவை தொடுத்தேன்.... 


பெயர்?????




பிரசவத்தின் வலி தெரியுமா?


அன்றுதான் உணர்ந்தேன். 


இதயம் துடித்து இடம் மாறி இருப்பதை உணர்ந்தேன்.


சரியா 36 வினாடிகள்...


பதில் வந்தது 


N. V.n=36N. Vஇருவரி ஹைக்கூ...இருவரின் ஹைக்கூ...


                                      காதலின் தொடக்கமது. எனக்கும் காதல் வந்தது. எனக்கே நம்ப முடியவில்லை.


இதயம் தன்னை இடம் மாறி இன்னொரு இதயத்திற்கு இடம் விட்டு நிறபதாய் சொன்னது. என் வீட்டு நிலைக் கண்ணாடி நல்லதோர் முகம் காட்டி "நம்பு... நீதான்" என்றது.


 நம்பினேன்.. நம்பிவிட்டேன்.


 இப்படியே போன சில நாட்களில் அந்த தேவதை முகம் பார்த்தேன். பேசினோம்.. சில வார்த்தைகள்.. பல பார்வைகள். 


n=36 கதை மட்டும் தொடர்ந்தது. என் கேள்விக்கான பதில்கள் அவளிடம் இருந்தே கிடைத்தது..ஏனெனில் கேள்வி இதுவருக்குமானது.வாழ்வும் இருவருக்கமாக மாற்றும் முயற்சியில் இருதேன்.


 பத்தாம் வகுப்பு ஆரம்பித்தது....



 இப்போது மற்ற இரண்டு பெண்களும் வகுப்பிற்கு வருவதில்லை. நாங்கள் இருவர் மட்டுமே.. ஆகையால் ஒரே வகுப்பானது. நாம் இருவர்... மகிழ்ச்சி.....


அப்போதுதான் இருவரும் பேச ஆரம்பித்தோம்.....


"ஏய்... மேத்ஸ் ஈசி தெரியுமா?" அவள்.


"எனக்கு இல்லை... எனக்கு தமிழ்தான் ஈசி".. நான்


"கேள்விப்பட்டேன்... நீ நல்லா கவிதை எழுதுவீனு"


"ஆமாம்"


"தமிழ் படிச்சு என்ன செய்வ... மேத்ஸ் படிச்சாதான் இஞ்சிபியர் ஆகமுடியும்"


"எனக்கு.. மேத்ஸ் வரல."


"ஏன்?"


"எனக்கு எங்க மேத்ஸ் வாத்தியாரை (TP) ய பிடிக்காது"


"உனக்கு நான் சொல்லித்தாரேன்"


"நீ சொல்லித்தந்தாலும் வராது"


"ஏன்? என்னையும் உனக்கு பிடிக்காதா?"


சட்டென்று பதிலை தொலைத்து நின்றேன்.


என்ன சொல்வது... பிடிக்கும்னு எப்படி சொல்ல? பிடிக்கும்னு சொல்லவா..


பதில் கிடைத்தது... பண்பாடு தடுத்தது.


பரவாயில்ல.. நான் உனக்கு சொல்லித்தாரேன் என்றாள். அவள் பாடம் சொல்லித்தந்தாள். ஆசிரியர் தேர்வு வைப்பார். முடிந்ததும் பேப்பரை கொடுத்துவிட்டு நான் கீழே சைக்கிளை எடுக்க நிற்பேன். அவள் வருவாள்.. ஒரு பேப்பர் கொடுப்பாள். அதில் விடைகள் இருக்கும். வழக்கம் போல...


கேள்வி-1= n=36கேள்வி-2= y=3.5.............இப்படி.."வீட்டுல போய் ஆன்ஸர் செக் பண்ணிப்பாரு... தப்பா எழுதுனத சரியா எழுதிட்டு வந்து திங்கள் கிழமை வந்து காமி".


கிரிக்கெட் விளையாடப் போகாத... இதுதான் லைப் "..


நமக்கு?


உனக்குநு சொல்லலைல..


நமக்கு... நாம்.


நீ என்று சொல் உதடுகள் கூட ஒட்டாது..


நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்..


உதடுகள் ஒட்டுமா?????😍😍

 இப்படி போனது வாழ்க்கை. 


கணிதம் புனிதமானது.


புதிர்கள் விடுபடலானது.


எண்கள் என் கள்ளானது.


கணித போதை காதல் போதை இரண்டும் ஆட்டுவித்த காலம் அது.


பத்தாங்கிளாஸ் தேர்வு வந்தது.. 


தேர்வுக்கு முந்தைய நாள்.. All the best சொன்னாள். பரீட்சை எழுதி முடித்ததும் டியூசனுக்கு வா என்றாள்.தேர்வு முடிந்தது. சென்றேன்.. அவள் வரவில்லை.மற்ற தேர்வுகள்..முடிந்ததும் விடுமுறை.மதுரை பயணம்.

10த் ரிசல்ட் வந்தது.மார்க் சீட் வாங்கியதும் முதலில் பார்த்தது கணித மார்க்..


 100க்கு 100. 


மகிழ்ச்சி...


என் தேவதைக்கு நான் வழங்கும் பரிசு இது.


இந்த மகிழ்ச்சியை சொல்லும் அதே நேரம் காதலையும் சொல்லி விட முடிவெடுத்தேன்.எங்கே சந்திக்க??


அவள் பள்ளிக்கூடம் விரைந்தேன். வாசலில் நின்றேன். காத்திருந்தேன். வரவில்லை.


ஆகா... டியூசனில் எனக்காக காத்திருப்பாள். ஓடினேன். 


ஆசிரியர் இருந்தார். என்னப்பா எவ்ளோ மார்க்.. 


மார்க் சீட்டை கொடுத்து விட்டு கண்கள் அவளை தேடியது.சூப்பர்ப்பா... நாங்க சொல்லிக் கொடுத்தது வீண் போகல..


யாருக்கு யார் சொல்லிக் கொடுத்தா? 


அவருக்கான அவரின் பாராட்டுகள். சொல்கிட்டு போகட்டும். 


சார்... விஜி வந்தாளா?


இல்லப்பா..அவங்க அப்பாவுக்கு transfer ஆகிடுச்சாம். பரீட்சை முடிந்த மறு நாளே அவள் மதுரை கிளம்பிட்டா...


இடி விழுந்தது. அப்ப இந்த நூற்றுக்கு நூறு.. என் காதல்...அய்யோ..



"சுகுமார் மறந்துட்டேன்.. உன்கிட்ட கொடுக்க சொல்லி ஒரு பேப்பர் கொடுத்திட்டு போனாள்."


ஆகா... மகிழ்ச்சி..


ஆனால் வெளிக்காட்டவில்லை. "சர் சார் வீட்ல போய் பார்க்கிறேன். அம்மா வெயிட் பண்ணுவாங்க".


" சரிப்பா.. +1க்கு இங்கேயே வந்திடு.. +2 செண்டம் எடுத்தால் இஞ்சினியர் ஆகிடலாம்"


ம்ஹூம்.. அங்க தர்மர் என்னை டாக்டர் ஆக்கனும்னு வெறி பிடிச்சு தெரிஞ்சுட்டு இருக்கார்... நீங்க இஞ்சினியர் ஆக்கணும்னு வெறி பிடிச்சு அழைறீங்க...


வீட்டுக்கு வந்தேன். எல்லோரும் வாழ்த்து சொன்னார்கள். எதுவும் கேட்க வில்லை. 

பரபரவென மாடிக்கு ஓடினேன். 


சீல் செய்யப்பட்ட கவர். 


சுகுமாருக்கு என்று எழுதியிருந்தது..


ஆகா... எனக்கும் காதல் கடிதம். நம்ப முடியல. அட்ரஸ் கொடுத்திருப்பா.. படிச்சதும் பதில் எழுதணும். மதுரையில் தான் கல்லூரிக்கு போகணும். அப்பத்தான அவளை பார்க்கமுடியும்.


ஒரு கவரை பிரிப்பதற்குள் மனம் கல்லூரி முதல் கல்யாணம் வரை விழுந்துவிட்டது.படபடவென பிரித்தேன்.


உள்ளே ஒரு தாள்...


அவளின் மணம்..


அவளின் மூச்சை உணர்ந்தேன்.அவளின் இதயம் அங்கே துடிப்பது எனக்கு கேட்டது... எனக்கு மட்டுமே கேட்டது.பிரித்து விட்டேன்.அதில். இப்படி ஆரம்பித்திருந்தாள்...

[16:26, 13/06/2016] SugumaranPACM: முடிவ எல்லோரும் இருக்கும்போது சொல்றேன்.













அதில் இப்படி ஆரம்பித்திருந்தாள்...



கேள்வி-1= n=36கேள்வி-2= x=3.5

All the best to score 100. 

You are my first student.








பயபுள்ள நம்மள மக்கு ஸ்டூடண்டால நினைச்சு பழகிட்டு இருந்திருக்கு..இப்படி முடிந்தது என் முதல் காதல்.போதுமாய்யா..


[16:04, 13/06/2016 to 16:26, 13/06/2016 Chat story typed by Sugumaran in Whatsapp.